புதுக்கோட்டை அருகே உள்ள பூங்குடி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மனைவிபெரியநாயகி(58)இவர் நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை மீண்டும் வீட்டுக்கு ஓட்டி வருவதற்காக வீட்டின் பின்புறம் உள்ள வயலுக்கு சென்றுள்ளார்.நீண்ட நேரம் ஆகியும் பெரிய நாயகி வராததால் சந்தேகம் அடைந்த அவரது மருமகள் முத்துலட்சுமி தேடிச்சென்றுள்ளார்
அப்பொழுது வயலில் நெற்றியில் பலத்த காயத்துடன் பெரியநாயகி கொலை செய்யப்பட்டு கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பெரியநாயகி கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் தாலிச் செயின்,மூக்குத்தி ஆகியவை திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது .இது குறித்த புகாரின் பேரில் வெள்ளனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைக்காக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமாக என்று விசாரணை செய்து வருகின்றனர்
மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே இன்று காலை பெரியநாயகியை கொன்ற கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என அந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.