Skip to content
Home » திருவானைக்காவலில் வீட்டு முன் வெங்காய வெடி வீச்சு… 3பேர் கைது

திருவானைக்காவலில் வீட்டு முன் வெங்காய வெடி வீச்சு… 3பேர் கைது

  • by Senthil

கடந்த5தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட   திருவானைக்காவல் பாரதி
நகரில் ஒரு பெண் வீட்டிலிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் தகாத வார்த்தையால் பேசி ஏதோ பொருளை வீட்டின் வாசலில் வீசியதில், அது வெடித்து சத்தம் கேட்டதில் அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஒடிவிட்டனர்.  இது தொடர்பாக நடவடிக்கை வேண்டி  அந்த பகுதி மக்கள் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக  சம்பவ இடத்தில் காவல் அதிகாரிகள் விசாரணை செய்தும், சம்பவ இடத்தில் தடய அறிவியல் உதவி இயக்குநர் நேரில் பார்வையிட்டும் மாதிரிகளை சேகரித்தும், விசாரணை மேற்க்கொண்டனர்.  வீட்டின் வாசலில் இரண்டு பெரிய நாட்டு வெடி (வெங்காய வெடி) வீசி சென்றுள்ளார்கள் என போலீசார் கண்டறிந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கம் உள்ள சிசிடிவி கேமராக்களை  போலீசார் ஆய்வு செய்தும், புகார்தாரர் அடையாளம் தெரிவித்த நபர்களை பற்றியும் போலீசார்  புலன்விசாரணை  செய்தனர்.

விசாரணையில்,

1.வரதராஜன்(23) த.பெ. ஆனந்த்,

2. முகேஷ் (23), த.பெ. ராஜா

3.சடையன் @ அய்யப்பன் த.பெ. தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
முன்விரோதம் காரணமாக மேற்படி வீட்டின் வா ஆகியோர்
முன்விரோதம் காரணமாக மேற்படி வீட்டின் வாசலில் நாட்டு வெடி (வெங்காய வெடி)
வீசிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.

அவர்களை போலீசார்  தேடி கண்டுபிடித்து கைது செய்ய முயன்றபோது 3 பேரும்  போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்று காம்பவுண்ட் சுவர் ஏறிக்குதித்தனர். இதில் வரதராஜன், முகேஷ்  ஆகியோர்  இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு  திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதில் 3 பேரும்  குற்றத்தை ஒப்புக்கொண்டனர். எனவே 3 பேரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும் விசாரணையில் வரதராஜ்  அடிக்கடி வழிப்பறி, போக்சோ என 5 வழக்குகளில் தொர்புடையவா் என்பதும்,  முகேஷ் என்பவர்  மீது அடிதடி வழக்கு, வழப்பறி என 3 வழங்குகள் நிலுவையில் இருப்பதும்  தெரியவந்தது.  நாட்டு வெடியை வீசி பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்றவர்களை   கைது செய்த  தனிப்படை காவல் ஆய்வாளர் மற்றும் போலீசாரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!