Skip to content
Home » எடப்பாடி சர்வாதிகாரம்…. ஓபிஎஸ் விரக்தி….

எடப்பாடி சர்வாதிகாரம்…. ஓபிஎஸ் விரக்தி….

சென்னை , கிரீன்வேஸ் சாலையில் இன்று ஓபிஎஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில் அவர் கூறியதாவது…  எங்களை கட்சியை விட்டு நீக்கும் தகுதி யாருக்கும் இல்லை. தமிழகத்தில் எங்கு சென்றாலும் ஈபிஎஸ்-க்கு எதிர்ப்பலை பாயும். வழக்கு நிலுவையில் இருக்கும் போது அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசரம். பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சர்வாதிகாரமானது. ஈரோடு இடைத்தேர்தல் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானது. அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே அதிமுக தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பிட்பாக்கெட் அடித்து செல்வது போன்று பொதுச்செயலாளர் தேர்தல் உள்ளது. ஏப்ரல் 2வது வாரத்தில் திருச்சியில் பெரிய மாநாடு நடத்தப்படும். மாநாடு நடத்திய பிறகு மாவட்டந்தோறும் தொண்டர்களை சந்திக்க உள்ளோம்.  எங்களது பயணம் மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கி  சென்ற கொண்டிருக்கிறது. ஈபிஎஸ் அணியிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுப்பதே எங்களது நோக்கம். இனிமேலும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என எதிர்பார்க்கவில்லை என்று இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!