சென்னை ,போயன் கார்டனில் ரஜினி வீட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ரஜினியை சந்தித்து பேசினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர். பின்னர் ரஜினிக்கு ஓ.பன்னீர்செல்வம் பூங்கொத்து
கொடுத்தார். ரஜினியை ஓ.பன்னீர்செல்வத்தை உற்சாக வரவேற்றார். தற்போதைய அரசியல் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் சால்வை அணிவித்துக்கொண்டனர். இதன் போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.