Skip to content
Home » பாபநாசத்தில் கூட்டணி கட்சியின் தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தார் காங்., வேட்பாளர்..

பாபநாசத்தில் கூட்டணி கட்சியின் தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தார் காங்., வேட்பாளர்..

  • by Senthil

திமுக தலைமையிலான கூட்டணியின் மயிலாடுதுறை காங் வேட்பாளர் வக்கீல் சுதா அறிமுகக் கூட்டம், கூட்டணி கட்சிகளின் பாபநாசம் சட்ட மன்றத் தொகுதி அலுவலகத் திறப்பு விழா நேற்று நடந்தது. பாபநாசத்தில் நடந்த விழாவிற்கு தஞ்சை வடக்கு மாவட்டச் செயலரும், ராஜ்ய சபா எம்.பி யுமான கல்யாண சுந்தரம் தலைமை வகித்தார். இதில் மயிலாடு துறை முன்னாள் எம்.பி ராமலிங்கம், ராஜ்ய சபா எம்.பி சண்முகம், காங் தஞ்சை வடக்குத் தலைவர் லோகநாதன், தெற்குத் தலைவர் ராஜேந்திரன், மயிலாடு துறை எம்.எல்.ஏ ராஜ்குமார், தி.மு.க மாவட்ட துணைச் செயலரும், தொகுதி பொறுப்பாளருமான அய்யா ராசு, மாவட்ட துணைச் செயலர் துரை முருகன், அம்மா ப் பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன், தி.மு.க ஒன்றியச் செயலர்கள் பாபநாசம் வடக்கு தாமரைச் செல்வன், தெற்கு நாசர், அம்மா ப் பேட்டை வடக்கு சுரேஷ், தெற்கு குமார், தி.மு.க பேரூர் செயலர்கள் பாபநாசம் கபிலன், அய்யம் பேட்டை துளசி அய்யா, மாநில அயலக அணி நிர்வாகி விஜயன், சிறுபான்மை அணி நிர்வாகி அனிபா, சுற்றுச் சூழல் அணி நிர்வாகி கார்த்தி, கலை, இலக்கிய அணி நிர்வாகி முபாரக் ஹுசைன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தமிழன், உறவழகன், மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் பாதுஷா, ரிபாயி, திராவிடர் கழகம், மார்க்சியக் கம்யூ மாவட்டச் செயற் குழு உறுப்பினர் பக்கிரி சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் காதர் ஹீசைன், பாபநாசம் ஒன்றியச் செயலர் முரளிதரன், அம்மாபேட்டை ஒன்றியச் செயலர் நம்பி ராஜன், இந்தியக் கம்யூ ம.தி.மு.க, தமிழக வாழ்வுரிமை கட்சி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதில் வேட்பாளர் வக்கீல் சுதா பேசும் போது இந்தத் தேர்தல் இந்தியத் தாயை காப்பாற்றுவதற்கானத் தேர்தல் . உங்களுக்கு விசுவாசமாக இருப்பேன். நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவள். உங்களால் எளிதில் அணுகக் கூடியவளாக இருப்பேன். தொகுதிக்கு மருத்துவக் கல்லூரி கொண்டு வர முயற்சியெடுப்பேன். உங்களின் குரலாக பாராளுமன்றத்தில் ஒலிப்பேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!