Skip to content
Home » பாபநாசம் அருகே ரமலானை முன்னிட்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…

பாபநாசம் அருகே ரமலானை முன்னிட்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த ராஜகிரி மதரஸாயே ஹிதாயத்துன் நிஸ்வான் பள்ளியில் ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைப் பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாபநாசம் பெரிய பள்ளிவாசல் ஜமாத் துணைத்தலைவர் ஹாஜாமைதீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கௌரவ ஆலோசகர் அப்துல்ரவூப், ராஜகிரி பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபை தலைவர் யூசுப்அலி, ஆர்டிபி கல்லூரி தாளாளர் தாவூத்பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பெரிய பள்ளிவாசல் இமாம் முஹம்மது இஸ்மாயில் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஜமாத்துல் உலமா சபை மாநில துணைத் தலைவர் ஜியாவுதீன் பேசினார். இதில் நிஸ்வான் பள்ளி தலைவர் நூர்முஹம்மது, செயலர் முஹம்மதுபாரூக்,பொருளாளர் முஹம்மதுரபி, பாபநாசம் ராஜகிரி, பண்டாரவாடை ஜமாத்தார்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!