Skip to content
Home » பெயிண்ட் கடை பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பெயிண்ட் கடை பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை, மில்கேட் பகுதியில் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் ராஜா பெயிண்ட்ஸ் & கலர்ஸ் என்ற பெயரில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பெயிண்ட் பொருட்கள் விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் வேலை முடிந்து கடையை பூட்டு போட்டு இழுத்து பூட்டிவிட்டு உரிமையாளர் சென்று விட்டார். இன்று காலை 10.00 மணி அளவில் கடையை திறக்க வந்த உரிமையாளர் ஒரு பக்க சட்டரில் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாப்பெட்டியில் இருந்த 8

லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸ் ஸ்டேசனிற்கு கந்தசாமி புகார் தெரிவித்தார். இப்புகாரின் பேரில் அப்பகுதிக்கு வந்த தாந்தோணிமலை போலீசார் சிசிடிவி ஆதாரங்களை கைப்பற்றி, கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை கைப்பற்றி பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!