Skip to content
Home » பேனருக்கு பூட்டு போட்டுள்ள பாஜ., அமைச்சர்….

பேனருக்கு பூட்டு போட்டுள்ள பாஜ., அமைச்சர்….

புதுவை குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார். பாஜ., அமைச்சரான இவர் புதுவை ஊசுடு தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர். ஊசுடு தொண்டமாநத்தம் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்குவதையொட்டி பேனர் வைத்துள்ளார். அந்த பேனரில் பிரதமர் மோடி, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி படங்கள் இடம்பெற்றுள்ளது. புதுவை-விழுப்புரம் சாலையில் இந்திரா சிலை சதுக்கத்தில் பேனர் வைத்துள்ளார். இந்த பேனரை யாரும் அகற்ற கூடாது என்பதற்காக பின்பக்கமாக பூட்டு போட்டுள்ளார். இதன் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!