Skip to content
Home » பஞ்சாப்… துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தமிழக ராணுவ வீர்களின் உடல் தமிழகம் வந்தடைந்தது….

பஞ்சாப்… துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தமிழக ராணுவ வீர்களின் உடல் தமிழகம் வந்தடைந்தது….

பஞ்சாப் மாநிலம் பதின் டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இரண்டு பேரின் உடலும் தமிழகம் கொண்டுவரப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளிவரவில்லை என்று கூறப்படுகிறது.நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த வனவாசியை சேர்ந்த தறி தொழிலாளியின் மகன் கமலேஷ் உயிரிழந்தார் . 24 வயதான அவருக்கு இன்னும்

திருமணம் ஆகவில்லை கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து ராணுவத்தில் சேவையாற்றி பணியாற்றி வந்துள்ளார். இவருடைய உடலை கோவை விமான நிலையத்தில் உள்ள விமான சரக வளாகத்திலிருந்து ராணுவ மரியாதை செலுத்திய உடன் அவருடைய சொந்த ஊரான மேட்டூர் வனவாசிக்கு தமிழக அரசின் அமரர் ஊர்தி மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. அவருடைய உடல் சேலம் சென்றடைந்த உடன் அங்கிருந்து உறவினர்களின் வழிகாட்டுதலின்படி மேட்டூர் வனவாசிக்கு எடுத்துச் செல்லப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!