Skip to content
Home » பாபநாசம் அருகே மகன்களுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை….

பாபநாசம் அருகே மகன்களுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள உத்தாணி ரயில்வே கேட் குடமுற்று ஆற்றுப்பாலம் அருகில், செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை சென்ற விரைவு ரெயில் முன் பாய்ந்து பெண் ஒருவர் தனது 11 வயது மற்றும் 9 வயது பெண் குழந்தைகளோடு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களின் உடல்களை கைப்பற்றி கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்தது கும்பகோணம் பாரத் நகரை சேர்ந்த ஆர்த்தி மற்றும் அவரது மகள்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கோவையில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும், ஆர்த்தியின் கணவர் ராஜேஷூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தாய் தனது மகள்களுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!