Skip to content
Home » பாபநாசத்தில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்…

பாபநாசத்தில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்…

  • by Senthil

தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.கழக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடந்தது. பாபநாசம் அரசு மருத்துவமனை அருகில் நடந்த கூட்டத்திற்கு சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு மாவட்ட அமைப்பாளர் பாவை அனிபா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் யூசுப் அலி வரவேற்றார். ஒன்றியச் செயலர்கள் பாபநாசம் தெற்கு நாசர், பேரூர் செயலர் கபிலன், மாவட்ட துணை அமைப்பாளர் ராயல் அலி முன்னிலை வகித்தனர். தலைமைக் கழகப் பேச்சாளர் தமிழன் பிரசன்னா பேசினார். அவர் பேசும் போது சங்கிகளுக்கு மூளையெல்லாம் கிடையாது. மோடி பிராமணர்களின் அடிமை. போன தேர்தலில் சிஏஏ வந்தது. இந்த தேர்தலில் சிவில் சட்டம் வந்தது. ஊரான் பெற்ற பிள்ளைக்கு பேர் வைக்கிற கட்சி பா.ஜ.க. பா.ஜ.க நாட்டிற்கு தேவையில்லாத ஆணி.

ஆளுநர் எங்களை ஆட்சி செய்ய விட மாட்டேங்கிறார். இசுலாமியர்களை, கிறிஸ்தவர்களை பாதுகாக்கிற கட்சி திமுக என்றார். இதில் மாவட்ட துணைச் செயலர் அய்யா ராசு, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் முத்துச் செல்வம், பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி, பேரூராட்சித் தலைவர்கள் பாபநாசம் பூங்குழலி, அய்யம் பேட்டை புனிதவதி, பாபநாசம் வடக்கு ஒன்றியச் செயலர் தாமரைச் செல்வன், அய்யம் பேட்டை பேரூர் செயலர் துளசி அய்யா, மீனவர் அணி புகழேந்தி, ஊராட்சி மன்றத் தலைவர் பெருமாள் கோயில் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மணலூர் ஜெயந்தி, மாவட்ட மருத்துவ அணி துணைத் தலைவர் நவநீத கிருஷ்ணன், வக்கீல் வெற்றிச் செல்வன், ராஜகிரி ஊராட்சி மன்ற உறுப்பினர் முபாரக் ஹீசைன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். மாவட்ட துணை அமைப்பாளர் பக்கீர் மைதீன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!