பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை துன்புறுத்துவதாக மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், பரமக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது மனைவி அளித்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக அவரது மனைவியே புகார் அளித்து, அதன் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
