Skip to content
Home » பாரீஸ் ஒலிம்பிக்…… தொடக்க விழாவில் … தேசியகொடி ஏந்தி செல்வார் தமிழக வீரர் சரத்கமல்

பாரீஸ் ஒலிம்பிக்…… தொடக்க விழாவில் … தேசியகொடி ஏந்தி செல்வார் தமிழக வீரர் சரத்கமல்

  • by Senthil

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில்  வரும் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியஅணிக்கு டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்வார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அறிவித்தது.

தமிழகத்தை சேர்ந்த 41 வயதான சரத்கமல் கூறுகையில், ‘இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இது எனது 5-வது மற்றும் கடைசி ஒலிம்பிக் போட்டியாக இருக்கப்போகிறது. இத்தகைய கவுரவம் டேபிள் டென்னிசில் நிறைய வீரர்களுக்கு கிடைத்ததில்லை’ என்று குறிப்பிட்டார். மேலும், ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய குழுவின் தலைவராக முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!