Skip to content
Home » வருடம் 300 பேருக்கு உயர் கல்வி வழங்குகிறார் பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர்…

வருடம் 300 பேருக்கு உயர் கல்வி வழங்குகிறார் பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர்…

  • by Senthil

பெரம்பலூர் தொகுதி தற்போதைய எம்.பியான ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் மீண்டும்  பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில்  போட்டியிடும் அவர்  பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து  வாக்கு சேகரித்து வருகிறார்.

வேட்பாளர் பாரிவேந்தரின்  மக்கள் பணிகளில் சில  வருமாறு:

ஏழ்மை குடும்பத்தில் பிறந்து. சாதாரண ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று
பல கல்வி நிறுவனங்களை உருவாக்கியுள்ளவர் டாக்டர் பாரிவேந்தர். கடந்த 2019 ம் ஆண்டு
மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் இந்திய ஜனநாயக
கட்சியின் நிறுவனரான பாரிவேந்தர்.

இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது
பெரம்பலூர் தொகுதிக்கு பல நன்மைகளை செய்துள்ளார். ஒரு எம்பியாக மட்டுமின்றி ஒரு
தனிமனிதராக தனது சொந்த நிதியிலிருந்து மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார்.
அதில் சிலவற்றை இங்கு காண்போம்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 100 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.10 லட்சம்
மதிப்பிலான கணினிகளைத் தமது சொந்த நிதியில் இருந்து வழங்கியுள்ளார் பாரிவேந்தர்.
ஏழ்மை நிலையால் உயர்கல்விப் படிக்க இயலாமல் ஒப்பந்த அடிப்படையில் சாலைப்
பணிகளில் ஈடுபட்டு வந்தவர் கடலூர் மாவட்டம் வி.சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த
சத்யாதேவி. இந்த மாணவிக்கு எஸ்.ஆர்.எம் கல்லூரியில் வேளாண் உயர்கல்வியும், தங்கும்
விடுதி மற்றும் உணவு ஆகியவற்றை மூன்று ஆண்டுகளுக்கு கட்டணமில்லாமல்
வழங்கியிருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் பாரிவேந்தரின் பிறந்தநாளின்போது, 100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு
தேவையான கல்விஉபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. முசிறி பகுதி வேளாண்குடி
மக்களின் பல்லாண்டு காலக் கோரிக்கையான கொரம்பு எனும் நீர் தடுப்பு அமைப்பு
அமைப்பதற்கு நேரில் ஆய்வு செய்து தீர்வு காண வழிவகை செய்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு
இயந்திரம் அமைக்க, எஸ்.ஆர்.எம் அறக்கட்டளையில் இருந்து மக்களுக்காக ரூ.1 கோடி நிதி
வழங்கியிருக்கிறார்.

வறட்சியின் போது குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க தமது சொந்த செலவில் இருந்து லாரிகள்
மூலம் தேவைப்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்கினார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மினி வேன் டயர் வெடித்து கிணற்றுக்குள் விழுந்ததில் 8
பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தமது சொந்த
பணத்தில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கி, அவர்களின் குழந்தைகளின் கல்விச்
செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார்.

பொருளாதாரப் பற்றாக்குறையால் மருத்துவம் பெற இயலாமல் உயிரிழக்கும் ஏழை
மக்களைக் காக்கும் பொருட்டு, பிரதமர் உதவித் தொகை மூலம் நோய்வாய்ப்பட்ட ஏழை
மக்கள் இலவச சிகிச்சை பெற, பிரதமருக்குப் பரிந்துரை செய்ததன் அடிப்படையில், பிறந்த
குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர்வரை 40-க்கும் மேற்பட்ட ஏழை நோயாளிகள்
ஒவ்வொருவரும் ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை உயர்தரமான கட்டணமில்லா
மருத்துவம் பெற ஏற்பாடு செய்தவர் பாரிவேந்தர்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் தாம் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும்
வகையில், ஆண்டுக்கு 300 மாணவர்கள் வீதம் தொடர்ந்து 4 ஆண்டுகள் 1,200 மாணவ
மாணவியர்களுக்கு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் கட்டணமில்லா உயர் கல்வி வழங்கி
வருகிறார் பாரிவேந்தர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!