Skip to content
Home » அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றுவேன்….. பாரிவேந்தர் வாக்குறுதி

அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றுவேன்….. பாரிவேந்தர் வாக்குறுதி

  • by Senthil

பெரம்பலூர் தொகுதி  பாஜக வேட்பாளரும், ஐஜேகே நிறுவனருமான  பாரிவேந்தர்  தொகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.  அவர் நேற்று  முசிறி, மண்ணச்சநல்லூர்  அடுத்த கிராமப்புறங்களில் ஆதரவு திரட்டினார்.   புலிவலம்,  மூவானூர்,  கோமங்கலம்,  அய்யம்பாளையம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், நல்லியம்பட்டி உள்ளிட்ட 20 கிராமங்களில்  திறந்த வேனில் சென்று  தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அவருக்கு கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது வேட்பாளர் பாரிவேந்தர் பேசியதாவது:

விவசாயிகள் வாழ்வு மேம்படவும், இடுபொருட்கள், விவசாய தளவாட பொருட்கள்.மானிய விலையில் கிடைக்கவும், உரிய நிதியை பெற்று உதவிசெய்வேன். நெசவாளர்களின்அடிப்படை பிரச்சினைகள் எதுவாயினும் பெரம்பலூரில்உள்ள அலுவலகத்தில் தெரிவியுங்கள். அதற்கான நடவடிக்கைஎடுப்பேன். இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்
தும் நிறைவேற்ற பாடுபடுவேன்.
பெரம்பலூர் எம்.பி.யாகமீண்டும் என்னை தேர்வு செய்தால் 1,500 குடும்பத்தினருக்குஉயர்தர சிகிச்சை வழங்க நடவ
டிக்கை மேற்கொள்வேன். தற்போது தொடரும் கல்வி சேவையையும் தொடர்ந்து செயல்படுத்துவேன். எனவே எனக்குதாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின்போது இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, மாநில செயலாளர் ஏ.கே.டி.
வரதராஜன், மாவட்ட தலைவர் கருணாகரன், மாவட்ட செயலாளர்தண்டபாணி, ஓ.பன்னீர்செல்வம்,அணி மாவட்ட செயலாளர் ரத்தினவேல், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, பாலகுமார். பா.ஜனதா6 மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன்,முசிறி மேற்கு மண்டல தலைவர் முருகேசன், மண்டல பொதுச்செயலாளரும், துலையாத்தம் ஊராட்சி மன்ற
தலைவருமான பழனிச்சாமி உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!