இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து பிப்.2-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், இது முழுமையான பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி மக்களவையில் இன்று காலை 11 மணி அளவில் பேசுகிறார். எனவே மக்களவைக்கு இன்று அனைத்து பா.ஜ.க. எம்.பி.க்களும் வரவேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் இதில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளதாக டில்லி தகவல்கள் தெரிவிக்கிறது.