Skip to content
Home » பாதாளச் சாக்கடையில் ஏற்படும் இறப்புகளை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம்….

பாதாளச் சாக்கடையில் ஏற்படும் இறப்புகளை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம்….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்   தலைமையில் இன்று (22.5.2023) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்  இ. பெரியசாமி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு,   நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  சிவ் தாஸ் மீனா,  பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. ஜெ.ராதாகிருஷ்ணன்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர்  ககன்தீப் சிங் பேடி,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் பி. செந்தில்குமார்,  நிதித்துறை முதன்மைச் செயலாளர்   த. உதயச்சந்திரன்,  சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர்  கிர்லோஷ் குமார்,  பேரூராட்சிகளின் இயக்குநர்  கிரண் குராலா, நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர்  பா. பொன்னையா,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!