Skip to content
Home » புதுகை அருகே பட்டாசு வெடிவிபத்து….2 பேர் பலி…. அரசு உதவிட கோரிக்கை…

புதுகை அருகே பட்டாசு வெடிவிபத்து….2 பேர் பலி…. அரசு உதவிட கோரிக்கை…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகேயுள்ள பூங்குடி கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்கூடம் நடத்தி வந்தவர் வைரமணி. இவரது பட்டாசு தொழிற்சாலை கடந்த 30ந்தேதி மாலை தீடிர் என பயங்கர வெடிசத்தத்துடன் வெடித்தது . இதில் பணியாற்றிய 6 பேர் கள் பலத்த காயமுற்று புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் . இந்நிலையில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் நேரு வீதியைச்சேர்ந்த வீரமுத்து , மற்றும் திருமலை ஆகியோர் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தனர். வெடிவிபத்து ஆடிமாதக்காற்று அதிகம் வீசியதால் அப்பகுதியில் உள்ள ஆர்.எஸ்.பதிமரங்கள் அப்பகுதியில் செல்லும் அதிக மின் அழுத்த கம்பியில் உரசியதில் தீப்பொறி விழுந்து வெடி விபத்து ஏற்பட்டது எனகூறப்படுகிறது. வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தார்கள் அரசு உதவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!