சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் படுக்கை அருகே பணியாளர்கள் முட்டைகளை வீசி எறிவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் அச்சப்படும் சூழல் எப்போது நீங்கும் என கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவமனைகளை நம்பி வரும் ஏழை, எளிய மக்களை அரசு ஊழியர்கள் மிகுந்த மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்துவதை தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
