Skip to content
Home » பெரம்பலூரில் தாய்மார்கள் பாலூட்டும் அறை… எஸ்பி ஷியாமளா தேவி திறந்து வைத்தார்…

பெரம்பலூரில் தாய்மார்கள் பாலூட்டும் அறை… எஸ்பி ஷியாமளா தேவி திறந்து வைத்தார்…

 

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியும் அதனை நடைமுறைப்படுத்தியும் சிறப்பான முறையில் செயல்படுத்தியும் வருகின்றார்கள். இந்நிலையில் இன்று 06.12.2023 -ம் தேதி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல்

நிலையத்திற்கு அருகில் மாவட்ட காவல்துறை மற்றும் இன்டர்நேஷ்னல் ஜஸ்டிஸ் மிஷன் (IJM)* இணைந்து பேருந்து நிலையத்தில் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்காக தாய்மார்கள் பாலூட்டும் அறை என்ற புதிய அறையை திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் A.பழனிச்சாமி, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் R.வெங்கடேசுவரன் மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!