பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக அருண் நேரு போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தொகுதி முழுவதும் அமைச்சர் நேரு பிரசாரம் செய்து வருகிறார். அதுபோல கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கிராமம் கிராமமாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாடு குரும்பா மக்கள் முன்னேற்ற சங்கத்தின் விழா பெரம்பலூர் முத்துகிருஷ்ணா மக்கள் மன்றத்தில் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே என் நேரு கலந்து கொண்டு திமுக அரசின் சாதனைகள் குறித்து விளக்கி கூறினார்.
அப்போது சங்கத்தின் நிர்வாகிகள் தங்களது ஆதரவை பெரம்பலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் அருண் நேருவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பதாக உறுதியளித்தனர். கூட்டத்தில் ,தேனூர் கிருஷ்ணன்,மாநில தலைவர் முத்துசாமி துணைத்தலைவர் ஆண்டி மற்றும் கழக நிர்வாகிகள் ஆனந்தன் முத்துசாமி கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்