பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் தோப்புத்தெருவைச் சேர்ந்த சண்முகம்- செல்லம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு ஒரே மகன் ராமகிருஷ்ணன் (35), ராமகிருஷ்ணன் பெரம்பலூரில் இரும்பு கடை ஒன்றில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் இவரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அதே குரும்பலூரைச் சேர்ந்த சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் ஆண் நபர் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் நகர போலீசார் தீயணைப்பு மற்றும் மீட்புபடை துறையினர் உதவியுடன் சடலைத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இறந்தவர் காணமல் போன ராமகிருஷ்ணன் என்பது உறுதியானது. இதனையடுத்து ராமகிருஷ்ணனின் உடலை கைப்பற்றிய போலீசார் அவரது உடலைபிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. ராமகிருஷ்ணன் இறப்பு தற்கொலையா.? அல்லது தவறி விழுந்தாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.