பெரம்பலூர் அருகே உள்ள மரவநத்தம் கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்தப் பள்ளி அருகே உள்ள பொது இடத்தில் பாஜகவை சேர்ந்தவர்கள் அனுமதியின்றி பாஜகவின் கொடிக்கம்பத்தை நட்டு உள்ளனர். இந்நிலையில் நேற்று பாஜக மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் அங்கு கொடியேற்றப்பட்டுள்ளது. அனுமதி இன்றி கொடியேற்றிய கொடிக்கம்பத்தை போலீசார் நேற்று இரவு
அகற்றினர். மேலும் பாஜக மாவட்ட தலைவர் செல்வராஜ் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று நள்ளிரவில் மாவட்ட தலைவர் செல்வராஜ் மற்றும் சுரேஷ் (38).மணிகண்டன் (30). வெங்கடேஷ்( 32) ஆகிய நான்கு பேரை கைது செய்த வி-களத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.