Skip to content
Home » பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை…..

பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை…..

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பனங்கூர் கிராமத்தில் மருவத்தூர் செல்லும் சாலையில் வசித்து வருபவர் தனலட்சுமி இவரது கணவர் இறந்த நிலையில் தனது மகள் பிரியா என்பவரை அதை உள்ளூரில் திருமணம் செய்து கொடுத்துவிட்டு தனது மகன் ஸ்டாலின் என்பவருடன் வசித்து வருகிறார் இந்த நிலையில் நேற்று இரவு தனலட்சுமி தனது மகளின் வீட்டிற்கு உறங்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது.ஸ்டாலின் தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வரும் நிலையில் நேற்று அவர் இரவு பணிக்கு சென்று விட்ட சூழலில் வீட்டில் யாரும் இல்லாத நோட்டமிட்ட

மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவையும் உடைத்து பீரோவில் இருந்த சுமார் 45 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 4.5 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்
பின்னர் தனலட்சுமி இன்று காலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு கூட்டம் உடைக்கப்பட்டும் வீடு திறந்த நிலையிலும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து வந்த மருவத்தூர் போலீசார் இந்த திருட்டு சம்பந்தம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!