Skip to content
Home » கடலூர் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்…

கடலூர் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்…

கடலூர் மாவட்டம், விருதாச்சலம் வட்டம், மங்களுர்பேட்டை கிராமம், தெற்குத்தெரு ரமேஷ்-விஜி தம்பதியினரின் மூன்றாவது மகன் நமச்சிவாயம்(24).

10ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் கோவில் ஸ்பதியாக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் அதே ஊர், அதே தெருவைச் சேர்ந்த எதிர் வீட்டில் வசித்து வந்த மருதைமுத்து-ராதா தம்பதியினரின் மகள் அனிதா(23).
பிஇ.,இசிஇ., என்வரை கடந்த 5 வருடமாக நமச்சிவாயம் காதலித்து வந்துள்ளார்.

இதனிடையே நமச்சிவாயத்தின்
ஒருதலைக்காதல் அனிதாவின் கவனத்தை வெகுவாக ஈர்த்ததால், அனிதாவும் நமச்சிவாயத்தை கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளார்.

இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால்,
அனிதாவின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் நமச்சிவாயமும், அனிதாவும் வீட்டை விட்டு வெளியேறி இன்று காலை 7 மணியளவில் சமூக செயல்பாட்டாளர் சத்தியபிரபு உள்ளிட்ட அவரது நண்பர்கள் முன்னிலையில், பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ கரடி முனியப்பன் கோவிலில், இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து கணவன்-மனைவியான நமச்சிவாயம்-அனிதா தம்பதியினர் அவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட உறவினர்களிடமிருந்து தங்களது உயிருக்கும், உடமைக்கும் உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டுமென பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் நமச்சிவாயம்-அனிதா தம்பதியினரின் பெற்றோரை பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வருமாறு தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!