பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த மதுபான கடையால் அதிக சாலை விபத்துகளும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அதிக மதுபான பிரியர்களால் அதிக தொல்லை இருப்பதாகவும் புகார் மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை சாலை மறியலும் செய்து அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் ஆனால் மதுபான கடையை அகற்றாமல் தொடர்ந்து இயங்கி வருவதால் மீண்டும் அப்பகுதி மக்கள் இன்று காலையில் சாலை மறியல் ஈடுபடு போவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்து
கடையை முற்றுகையிட்டனர்.இதனால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆத்தூர் சாலையில் உள்ள கடை எண் : 6325 என்ற கடை இன்றுடன் 31.01.24 முதல் மூடப்படுகிறது என்று பேனர் அடித்து ஒட்டப்பட்டு கடையை மூடினர். மீண்டும் இந்த கடையை இயக்கி வந்தால் பகுதி மக்களாக நாங்கள் சூறையாட வேண்டிய நிலை தான் வரும் என்று மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.