Skip to content
Home » பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் கடும் அவதி

பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் கடும் அவதி

  • by Senthil

மழைக்காலம் தொடங்கிய நிலையில் பல்வேறு நோய்கள் பரவி வரும் கால சூழலில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு குழந்தைகள் ,  வயது முதிர்ந்தவர்கள் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் சிகிச்சைக்காக தினந்தோறும் வருகின்றனர்.

அரசு ஆஸ்பத்திாியில் வெளி நோயாளி பதிவு செய்வது முதல் உள் நோயாளிகளின் ரத்தப் பரிசோதனை செய்வது வரை போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் காலதாமதம் ஆவதாக நோயாளிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.  இதனால்  ஆங்காங்கே நோயாளிகள்  வெகுநேரம் வரிசையில் காத்திருந்து கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். நோயாளிகளின்  குறைகளை போக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!