Skip to content
Home » பெரம்பலூர் அருகே விநாயகர் சிலை வைத்து வழிபடுவதில் பொதுமக்களுக்கு-போலீசுக்கும் தள்ளுமுள்ளு

பெரம்பலூர் அருகே விநாயகர் சிலை வைத்து வழிபடுவதில் பொதுமக்களுக்கு-போலீசுக்கும் தள்ளுமுள்ளு

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் வி.குளத்தூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அப்பகுதி கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அங்குள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் சிலையை வைத்து விநாயகர் சதுர்த்தி அன்று வழிபடுவதற்காக ஏற்பாடு செய்தனர் இத்தகவல் அறிந்த போலீசார் சம்பவ காலை முதல் இரவு 7 மணிவரை ஒன்றும் செய்யாமல் சுமார் 9 மணிக்கு மேல் வந்து விநாயகர் சிலை தங்கள் அனுமதி பெறவில்லை என்று அதனால் இங்கு வழிபடக்கூடாது என்று கூறியுள்ளனர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாங்கள் வருடாந்திரம் நடத்துவரும் இந் நிகழ்ச்சியை தடை கூறக்கூடாது என்றும் இது எங்கள் இந்துக்களின் பாரம்பரிய முறை என்றும் கூறியுள்ளனர் போலீசார் அதற்கு அனுமதி தராததால் போலீசார்க்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதமும் கைகளுக்கும் ஏற்பட்டது. இதனால் சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசாரை கொண்டு வந்து அங்குள்ள பொது மக்களை அடித்து உதைத்து தடியடி நடத்தி போலீசார் தங்கள் வாகனத்தை ஏற்றி சென்றனர் இதில் பல பொது மக்களுக்கு அடிபட்டதாகவும் காயங்கள் பட்டதாகவும் கூறப்படுகிறது இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டு போர்க்களம் போல் காணப்பட்டது. நான் தொடர்ந்து. இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள கைகளத்தூர் கிராமத்திலும் விநாயகர் சிலை வைத்து சாமி கும்பிட அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இரு கிராமங்களில் விநாயகர் சதுர்த்தி நாளில் சாமி கும்பிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!