Skip to content
Home » பெரம்பலூரில் ”கல்வியும் காவலும்”… மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பெரம்பலூரில் ”கல்வியும் காவலும்”… மாணவர்களுக்கு விழிப்புணர்வு

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 01.12.2023 -ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி *’கல்வியும் காவலும்’ என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு திட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியானது மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளிடம் போதை பொருட்கள் உபயோகிப்பதனால் ஏற்படும் விளைவுகள், போக்குவரத்து விதிகளை பின்பற்றுதல் மற்றும் ஏரி, குளம், ஆறு, போன்றவைகளில் குளிக்க செல்வதால் ஏற்படும் உயிரிழப்புகள், தற்கொலைகள், சாதிய பாகுபாடுகளை ஒழித்தல் ஆகியவை குறித்த விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டது. மேலும்

மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் *பள்ளியில் இடைநின்ற மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. *மேலும் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தெரிந்துகொள்ள வேண்டிய *தொடுதல் பற்றிய விழிப்புணர்வு, குழந்தை திருமணம், போக்சோ சட்டம் ஆகியவை குறித்த விழிப்புணர்வுகளும் மாணவர்களிடம் ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!