Skip to content
Home » பெரம்பலூரில் மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு… கலெக்டரிடம் பொதுமக்கள் மனு…

பெரம்பலூரில் மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு… கலெக்டரிடம் பொதுமக்கள் மனு…

  • by Senthil

பெரம்பலூரை அடுத்த செங்குணம் ஊராட்சிக்குட்பட்ட அருமடல் சாலை, முத்து நகர் மற்றும் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்திருந்தனர்

அந்த மனுவில் தங்கள் பகுதியில் ஏற்கனவே ஒரு மதுபானக்கடை இருக்கும் போது அதன் அருகில் இன்னொரு மதுபானக்கடை திறக்க உள்ளதாகவும் அதற்கான பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் ஏற்கனவே இருக்கும் மதுபானக்கடையால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாகவும், இந்த நிலையில் மற்றொரு கடை வந்தால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவோம் என்று கூறி பெரம்பலூர் முத்து நகர் மற்றும் முல்லை நகர் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபுவை சந்தித்து மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!