Skip to content
Home » குறைந்த அழுத்த மின் வினியோகம்…… வி.களத்தூர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்….

குறைந்த அழுத்த மின் வினியோகம்…… வி.களத்தூர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்….

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மங்களமேடு துணை மின் நிலையத்தில் நேற்று முன்தினம் டிரான்ஸ்பார்ம் வெடித்து சிதறியதாகவும் இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது இதன் காரணமாக மங்களமேடு துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் பெறும் கிராமங்களுக்கு லோ வோல்டேஜ் முறையில் மின்விநிலையகம் செய்யப்பட்டதாக தெரிகிறது

வி. களத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரம் காலமாக மின் விநியோகம் அடிக்கடி பழுதாகி வருகிறது இதை முறையாக மின் அதிகாரியிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுவதாக இன்று காலை விக்களத்தூர் பெரம்பலூர் சாலையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரம்பலூர் – வி.களத்தூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!