Skip to content
Home » பட்டா வழங்க லஞ்சம்…….பெரம்பலூர் அருகே விஏஓ கைது….

பட்டா வழங்க லஞ்சம்…….பெரம்பலூர் அருகே விஏஓ கைது….

  • by Senthil

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ராஜி மகன் பிரகாஷ் (29) என்பவர்  பெரம்பலூரல் மாவட்டம் அகரம்சீகூர் விஏஓ வாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் நிலம் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் எல்லை பகுதியில் உள்ளது அந்த காலி மனைக்கு பட்டா வழங்க கோரி விஏஓ பிரகாஷிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு கொடுத்துள்ளார்.

அதற்கு பட்டா வழங்க ரூ 2500 பிரகாஷ் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமகிருஷ்ணன் பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து மதியம் 2 மணியளவில் ராமகிருஷ்ணன் லஞ்சமாக ரூ. 2 ஆயிரத்து 500 ரூபாயை விஏஓ பிரகாஷிடம் கொடுத்தார். அப்போது அங்கு மாறுவேடத்தில் தலைமறைவாக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான போலீசார் விஏஓ பிரகாசை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை செய்து நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!