Skip to content
Home » பெரம்பலூர் வாலிபர் மர்ம சாவு…அழுகிய நிலையில் சடலம் கண்டுபிடிப்பு

பெரம்பலூர் வாலிபர் மர்ம சாவு…அழுகிய நிலையில் சடலம் கண்டுபிடிப்பு

  • by Senthil

பெரம்பலூர்  கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராஜ் நாயுடு மகன்  பிரபாகரன்(27) திருமணமாகாதவர்.   திருவாவுக்கரசு என்பவரிடம் நெல் அறுவடை எந்திரம் ஓட்டும் டிரைவராக வேலை செய்து வந்தார்.  கடந்த 10தினங்களுக்கு முன் பிரபாகரன்,  திருநாவுக்கரசிடம் பைக்கை வாங்கிக்கொண்டு சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இதுபற்றி  அரும்பாவூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்நிலையில் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் உள்ள உடுமியம் தனியார் சர்க்கரை ஆலை அருகே உள்ள பாலத்தின் அடியில்   பிரபாகரன் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.  அவரது சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. அருகில் பைக்கும் கிடந்தது.  அரும்பாவூர் போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி  பிரபாகரன் தற்கொலை செய்தாரா, கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் இங்கு பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!