Skip to content
Home » பிரக்ஞானந்தா பெற்றோருக்கு கார் பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா…

பிரக்ஞானந்தா பெற்றோருக்கு கார் பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா…

  • by Senthil

இந்தியாவின் பெரும் தொழிபதிபர்களில் ஒருவரும், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டராக புகழ் பெற்றிருக்கும் பிரக்ஞானந்தாவை பாராட்டி வந்திருக்கிறார். இந்த இளம் மேதையை முன்னுதாரணமாக்கி, தங்கள் குழந்தைகளுக்கு சதுரங்க விளையாட்டை பயிற்றுவிக்குமாறும், அதன் மூலம் குழந்தைகளின் மூளைத் திறனை தூண்டுமாறும் இந்திய பெற்றோருக்கு முன்னதாக வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருக்கிறார்.

இதனூடே பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு அவர்களின் நீண்ட கால கனவான எலெக்ட்ரிக் வாகனம் ஒன்றை ஆனந்த் மஹிந்திரா பரிசளித்திருக்கிறார். செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எட்டிய இளம் வீரரான பிரக்ஞானந்தா, தங்களுக்கு பரிசாக கிடைத்த புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 400 வாகனத்தையும், அதனை சூழ்ந்திருக்கும் தனது குடும்பத்தினர் அடங்கிய புகைப்படத்தையும் எக்ஸ் தளத்தில் இன்றைய தினம் பகிர்ந்துள்ளார்.
வாகன பரிசளிப்பின்போது
கூடவே ஆனந்த் மஹிந்திராவுக்கு நன்றியும் பகிர்ந்துள்ளார். ”XUV 400 கிடைத்தது. என் பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். மிக்க நன்றி ஆனந்த் மஹிந்திரா சார்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!