Skip to content
Home » பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வெளியாகும்..

பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வெளியாகும்..

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும், பிளஸ்-1 வகுப்புக்கு மார்ச் 4-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையிலும், எஸ்.எஸ். எல்.சி. வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26-ந்தேதி முதல் கடந்த மாதம் (ஏப்ரல்) 8-ந்தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடந்து முடிந்தது.பிளஸ்-2 தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகளும், பிளஸ்-1 தேர்வை சுமார் 8 லட்சம் பேரும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்களும் எழுதி இருந்தனர். இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வந்தது. பிளஸ்-2 விடைத் தாள்கள் திருத்தும் பணி கடந்த மாதம் 13-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்கள் திருத்தும் பணி 22-ந்தேதியும் நிறைவடைந்தன. இதுதவிர பிளஸ்-1 வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி அரியர் மாணவர்களுக்கு கடந்த மாதம் 13-ந்தேதியுடனும், மற்ற மாணவர்களுக்கு 25-ந்தேதியுடனும் முடிவடைந்தது. இதையடுத்து மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் ஓரளவுக்கு முடிவடையும் தருவாயில இருப்பதாக கூறப்படுகிறது.  பிளஸ்-2 வகுப்புக்கு வருகிற 6-ந்தேதியும் (திங்கட்கிழமை), எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு 10-ந்தேதியும் (வெள்ளிக்கிழமை), பிளஸ்-1 வகுப்புக்கு 14-ந்தேதியும் (செவ்வாய்க்கிழமை) தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. வழக்கம்போல் தேர்வு முடிவுகளை வீட்டில் இருந்தபடியே மாணவ-மாணவிகள் செல்போன் மற்றும் இணைய தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!