Skip to content
Home » அம்பாசமுத்திரத்தில் பொதுக்கூட்டம்.. பிரதமர் மோடி பங்கேற்பு..

அம்பாசமுத்திரத்தில் பொதுக்கூட்டம்.. பிரதமர் மோடி பங்கேற்பு..

  • by Senthil

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்கள் தமிழகத்தை முற்றுகையிட்டு பரப்புரை செய்து வருகின்றனர். இந்த நிலையில் , தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி , தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக இன்று பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். அவர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியா்பட்டியில் மாலை நடைபெறவுள்ள தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்.நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 4 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து  பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!