Skip to content
Home » பொள்ளாச்சியில் இஸ்லாமியர்களிடம் அதிமுக ஓட்டு சேகரிப்பு

பொள்ளாச்சியில் இஸ்லாமியர்களிடம் அதிமுக ஓட்டு சேகரிப்பு

  • by Senthil

கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக சார்பில் கார்த்திகேயன் போட்டியிடுகிறார்,ஆறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களிடம் அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்,மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் செய்த பல நல்ல திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறி மூன்று வருடம் கடந்தும் திமுக அரசு பொது மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யவில்லை ஆகவே மீண்டும் 2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி மலரும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆவார் என கூறி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,இந்நிலையில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கோட்டூர் ரோடு அருகே உள்ள பள்ளிவாசலுக்கு சென்று இஸ்லாமியர் போல் தொப்பி அணிந்து வேட்பாளர் கார்த்திகேயனுக்கு இரட்டைச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு ஓட்டு சேகரித்தார் பின் பள்ளிவாசல் மூத்த நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!