Skip to content
Home » தமிழ்நாடு….வாக்குச்சாவடி பலி 3 ஆக உயர்வு

தமிழ்நாடு….வாக்குச்சாவடி பலி 3 ஆக உயர்வு

  • by Senthil

தமிழ்நாட்டில் இன்று மக்களவை தேர்தல் நடக்கிறது. ஓட்டுப்போட வந்தவர்கள் வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து இறந்தனர்.  காலையில் சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லியில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு(77) என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.   சிறிது நேரத்தில் சேலம்  பழைய சூரமங்கலம் தனியார்  பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த பழனிசாமி என்பவர் மயங்கி விழுந்து இறந்தார்.  இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்.

இந்த நிலையில்  திருத்தணியை அடுத்த நெமிலி கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் (59) என்ற முதியவர் வாக்குசெலுத்த வரிசையில் காத்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் தமிழ்நாட்டில் வாக்குச்சாவடி பலி 3 ஆக உயர்ந்துள்ளது.  தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பரவலாக வெயில்  சுட்டெரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!