Skip to content
Home » தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி….21ம் தேதி நடக்கிறது

தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி….21ம் தேதி நடக்கிறது

  • by Senthil

நாடாளுமன்ற  தேர்தல்  வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு அம்சமாக  தமிழ்நாட்டில்  உள்ள வாக்காளர்கள் தேர்தல்நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில் 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில்   விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மாநில அளவில் பொதுமக்களுக்கான வினாடி வினா போட்டி வரும் 21ம் தேதி(ஞாயிறு) காலை 11 மணி முதல் 11.15 மணி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள்  கீழ்காணும் இணையதள முகவரியில் தங்கள் பெயர் மற்றும்  விவரங்களை பதிவு செய்யலாம்.
“http://www.erolls.tn.gov.in/Qui22024”
இப்போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை மேற்காணும்
இணையதளத்தில் 19.01.2024 வரை பதிவு செய்ய அனுமதிக்கப்படும். இதில் கலந்து
கொள்வதற்கு பங்கேற்பாளரின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியானது
கட்டாயமாக உள்ளீடு செய்யப்பட வேண்டும்.

“இந்தியாவின் தேர்தல்கள்” என்ற  தலைப்பின் அடிப்படையில் இந்த போட்டியானது நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான
மாநில உதவி மைய எண் 1800-4252-1950 மற்றும் மாவட்ட உதவி மைய எண் 1950 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட
ஆட்சித்தலைவர் .ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!