Skip to content
Home » 3 ஆண்டு சிறை……..பொன்முடி…. உச்சநீதிமன்றத்தில் அப்பீல்

3 ஆண்டு சிறை……..பொன்முடி…. உச்சநீதிமன்றத்தில் அப்பீல்

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு எதிராக  தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. இதில் கடந்த மாதம் 21ம் தேதி நீதிபதி ஜெயசந்திரன் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தார். அதில்  பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறையும்,  ரூ.50 லட்சம்  அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து பொன்முடி அமைச்சர் பதவியுடன் எம்.எல்.ஏ, பதவியையும் இழந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய 1 மாத காலம் அவகாசமும்   ஐ கோர்ட் வழங்கியது. இந்த நிலையில்  டில்லி உச்சநீதிமன்றத்தில் இன்று  பொன்முடி, அவரது மனைவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில்   மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்களது தண்டனையை  ரத்து செய்ய வேண்டும் என கோரி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!