Skip to content
Home » பொன்முடி வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு…… உச்சநீதிமன்றம் உத்தரவு

பொன்முடி வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு…… உச்சநீதிமன்றம் உத்தரவு

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கும்,  பொன்முடியின் மனைவி விசாலாட்சிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் தலா  3 ஆண்டு சிறைத்தண்டனையும்,  தலா ரூ.50 லட்சம் அபராதமும்  விதித்து  தீர்ப்பளித்தது. இதனால் அவர் அமைச்சர் பதவி இழந்தார். திருக்கோவிலூர் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.  இதை எதிர்த்து  பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.  அதனை விசாரித்த  உச்சநீதிமன்றம்,  பொன்முடி குற்றவாளி என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து இன்று உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!