Skip to content
Home » உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி…. பொன்முடியை அழைத்தார் கவர்னர்..

உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி…. பொன்முடியை அழைத்தார் கவர்னர்..

  • by Senthil

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என கவர்னர் ரவி கூறினார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  சந்திரசூட் தலைமையிலான அமர்வு  கவர்னருக்கு ஒரு நாள் கெடு விதித்தது. நாளைக்கு பதவி பிரமாணம் செய்து வைக்காவிட்டால் உச்சநீதிமன்றமே நடவடிக்கை எடுக்கும் என  கூறியது.

இந்த நிலையில் இன்று மாலை 3.30 மணிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என  கவர்னர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பு முதல்வருக்கு வந்துள்ளது. எனவே இன்று மாலை  பொன்முடி மீண்டும்உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி ஏற்கிறார். இதில் முதல்வரும் கலந்து கொள்வார். அதன் பிறகு தான் முதல்வர்  திருச்சிக்கு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!