Skip to content
Home » பட்டா மாற்ற லஞ்சம்……மயிலாடுதுறை அருகே….. விஏஓ கைது

பட்டா மாற்ற லஞ்சம்……மயிலாடுதுறை அருகே….. விஏஓ கைது

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார்  பகுதியை சேர்ந்தவர் விஜய்.  இவரது மனைவி நாகவல்லி, இவர் பட்டா மாறுதலுக்காக  பொறையார் விஏஓவிடம் விண்ணப்பித்து இருந்தார்.  காளியப்பநல்லூர் கிராம நிர்வாக அலுவலர்(பொறுப்பு)  பாண்டியராஜ் அலுவலகத்தில் பணியில் இருந்தார். அவர் பட்டா மாறுதலுக்கு ரூ.2500 லஞ்சம் பெற்றாா்.

இது குறித்து நாகவல்லி ஏற்கனவே மயிலாடுதுறை  லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்திருந்ததால் டிஎஸ்பி மனோகரன் , இன்ஸ்பெக்டர் அருள் பிரியா ஆகியோர்  விஏஓ பாண்டியராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.  தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!