தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சந்தைப்பேட்டை மார்க்கெட்டில் வாழை இலை விலை 10 மடங்கு உயர்ந்துள்ளது. வாழை இலை வரத்து குறைந்துள்ள நிலையில், முகூர்த்த நாள் என்பதால் தேவை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ஒரு கட்டு வாழை இலை ரூ.500க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.5,500க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ஒரு வாழை இலை ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ரூ.500க்கு விற்ற ஒரு கட்டு வாழை இலை ரூ.5,500ஆக உயர்வு
