Skip to content
Home » பிரதமரிடம் அரசியல் பேசவில்லை, மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்”….ஓபிஎஸ்

பிரதமரிடம் அரசியல் பேசவில்லை, மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்”….ஓபிஎஸ்

திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து அவரை வரவேற்றார்.

Image

மோடியுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், பிரதமருடன் நடந்த சந்திப்பில் அரசியல் பேசவில்லை. வாழ்த்து கடிதம் மட்டுமே அளித்தேன். வாய்ப்பு கிடைத்தால் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திப்பேன். பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார், பாஜகவுடன் இணைந்து பணியாற்ற நல்ல சூழல் உள்ளது. ஈபிஎஸ் குறித்த ரகசியத்தை தற்போது வெளியே சொல்ல இயலாது தெரிய வேண்டிய நேரத்தில் வெளியே வரும். கொடநாடு சம்பவம் நடைபெற்ற போது, நாங்கள் ஈபிஎஸ் உடன் இல்லை.

Image

2024 மக்களவை தேர்தலை அமமுக உடன் இணைந்து சந்திப்போம். பாஜக உடன் இணைந்து செயல்பட நல்ல சூழல் உருவாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்யும் வரை, எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!