கடந்த 2 மற்றும் 3ம் தேதிகளில் தமிழகம், லட்சத்தீவு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
லட்சத்தீவில் ரூ.1,150 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். கொச்சி-ட்சத்தீவுகள் நீர்மூழ்கி கப்பல் ஆப்டிகல் பைபர் இணைப்பு திட்டம் மற்றும் கட்மட்டில் குறைந்த வெப்பநிலை வெப்ப உப்பு நீக்கம் ஆகிய ஆலையை அவர் திறந்து வைத்தார்.
இந்நிலையில் தமது லட்சத்தீவு பயணம் குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வௌியிட்டுள்ளார்.
அதில்… லட்சத்தீவு மக்களுடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. தீவுகளன் பிரமிக்க வைக்கும் அழகையும் மக்களின் நம்பமுடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னும் பிரமிப்பில் இருக்கிறேன். லட்சத்தீவின் அமைதி மெய்சிலிர்க்க வைத்தது என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.