Skip to content
Home » புதுகை அருகே காரில் வந்த 2 பேருக்கு அரிவாள் வெட்டு…. 13 பவுன் நகை பறிப்பு.

புதுகை அருகே காரில் வந்த 2 பேருக்கு அரிவாள் வெட்டு…. 13 பவுன் நகை பறிப்பு.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி அருகில் 29ந்தேதி இரவு 12அளவில் புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடிகிராமத்தைச் சேர்ந்த சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களான செந்தில்குமார் வயது35, சீனிவாசன் , ஆகிய இருவரும் புதுக்கோட்டைக்கு காரில் வந்து விட்டு திரும்பி ஊருக்கு சென்று கொண்டிருந்த போது காரை நிறுத்தி சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த போது 8பேர் கொண்ட கும்பல் அரிவாளால் செந்தில்குமார், சீனிவாசன் , ஆகிய இருவரையும் வெட்டி விட்டு 13பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் 18ஆயிரம்,செல்போன்
இரண்டு ஆகியவற்றை பறித்துக்கொண்டு ஓடி விட்டனர். பலத்த காயம் அடைந்த இருவரையும் புதுக்கோட்டை
அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ப்பட்ட வருகிறது. சம்பவம் தொடர்பாக கணேஷ் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை கைது
செய்ய வலியுறுத்தி பூங்குடி கிராமத்தினர் அரசு மருத்துவக்கல்லூரி அருகில் நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!