Skip to content
Home » ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் தகராறு… புதுகையில் வாலிபர் குத்திக்கொலை…. பரபரப்பு..

ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் தகராறு… புதுகையில் வாலிபர் குத்திக்கொலை…. பரபரப்பு..

  • by Senthil

புதுக்கோட்டையில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் இரும்புக் கம்பியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். தகவல் அறிந்த போலீசார்  உடனடியாக அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரசு ஆஸ்பத்திரி முன்பு இளைஞரின் உறவினர் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீசாருடன் உறவினர்கள்- கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆஸ்பத்திரியின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இச்சம்பத்தில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஒருவர் கைது செய்யபட்டுள்ளார். மேலும் 5 பேரை  போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  இச்சம்பவத்தால்  அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!