Skip to content
Home » புதுக்கோட்டை……..விவசாயிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை……..விவசாயிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

உத்திரபிரதேச மாநிலம்  லக்கிம்பூர் கேரியில் போராடிய விவசாயிகள் மீதுகாரை ஏற்றி கொலைசெய்ய காரணமான ஒன்றிய பா.ஜ.க.அமைச்சர் மீது வழக்குப்போட்டு பதவியிலிருந்து நீக்ககோரி விவசாயிகள் இன்று  புதுக்கோட்டையில்  கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பஸ் நிலையம் அருகே உள்ள  அரசபோக்குவரத்து கழக வாயிலில்  தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி இணைந்து இந்த போராட்டத்தை நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்க மாவட்ட தொ.மு.ச.செயலாளர் கி.கணபதி தலைமைவகித்தார்.தொ.மு.ச தலைவர் அ.ரெத்தினம்,போக்குவரத்துக்கழக தொ.மு.ச.பொதுச்செயலாளர் வேலுச்சாமி,மூர்த்தி (டி என்.சி.சி.)
ஜெயக்குமார்(ஏ.ஐ.டி.யூ.சி)திருநாவுக்கரசு,சுந்தர்ராஜன்உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!