Skip to content
Home » புதுகை அருகே மீனவர் வலையில் சிக்கிய அதிக விஷம் கொண்ட பாம்பு…

புதுகை அருகே மீனவர் வலையில் சிக்கிய அதிக விஷம் கொண்ட பாம்பு…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி அருகே செம்பியன்மகாதேவிப்பட்டினத்தைசேர்ந்த மீனவர்கள் சிவக்குமார், தினேஷ்.  இவர்கள் இருவரும் பைபர் படகில் மீன்பிடித்து வருகின்றனர். புதன்கிழமை காலை மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வலையில் அதிக விஷத்தன்மை கொண்ட, 8 அடி நீளமுள்ள வாலடியான் என்ற பாம்பு சிக்கியது. உடனே அந்தப் பாம்பு அதிக ஆக்ரோஷத்துடனும், கடும் சீற்றத்துடனும் அங்கும்,  இங்குமாக ஓடியது. உடனே சுதாரித்துக் கொண்ட மீனவர்கள் அந்தப் பாம்பை அடித்து கொன்றனர். அந்தப் பாம்பு கடித்திருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்.  ஏனென்றால் அதிக விஷத்த தன்மை வாய்ந்த பாம்புகளில் இதுவும் ஒன்றாகும். இது குறித்து மீனவர்கள் கூறும் போது கடலில் இதுபோன்ற உயிருக்கு ஆபத்தான உயிரினங்கள் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. கடல் சொறி, உருமீன் மற்றும் விஷப் பாம்புகள் போன்றவை உயிருக்கு ஆபத்தானதாகவும், கெழுது முள் அதிக தீங்கு தரக்கூடியதாகவும் உள்ளது. இதுபோன்ற பல்வேறு ஆபத்துக்களை எதிர்க்கொண்டு நாங்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறோம் என்று கூறினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!